Tuesday, February 27, 2007

ஆங்கிலமும் அறியாமையும்

எங்க வீட்டுல முதல்முதலா முதல் வகுப்புலேந்து அங்கில வழி பாடதுல படிச்சது நாந்தான். என்னதான் ஆங்கில மீடியம்னாலும் பேசரதுலேந்து சிந்திக்கற வரைக்கும் தமிழ்லதான். பள்ளிகூடத்துல மட்டும் அப்ப அப்ப "yes child, no child" என்கிற ரீதியா அங்கிலம் பேசுவேன். தமிழ அப்படியயே அங்கிலத்துல மொழி பெயர்து பேசுவோம்." நீ வருகிறாயா??" என்பதை அப்படியே literal அ மொழி பெயர்த்து " You are coming?" என்று பின்னாடி ஒரு கேள்வி குறியோடு நிறுத்துவேன். "Are you coming??" என்று கேட்கணும்னு தெரியாது.

என்னோட ஆங்கில அறிவு வளரனும்னு என்னோட அப்பாக்கு ரொம்ப ஆசை. அதனால தினம் செய்திதாள்(ஆங்கிலம்) படிச்சேதீரணும்னு கண்டிப்பா சொல்லிட்டாங்க. பிடிச்சது எனக்கு சனி தசை. இதை கண்கானிக்க என் அண்ணன் வேர. கேக்கணுமா அவன் கொண்டாடத்த. பள்ளிகூடம் விட்டு வந்த உடனே சாப்பாடு, விளையாட்டு. சாயங்காலம் ஆறு மணிக்கு வீட்டுல இருக்கணூம். வீட்டுபாடம் முடிச்ச பிறகு செய்திதாளும் கையுமா வந்திருவான் எங்க அண்ணன். அப்புரம் ஒரே டார்ச்சர்தான். முதல்ல ஹெட்லைன்ஸ் சத்தமா வாய்விட்டு படிக்கணும். அப்புரம் ஸ்போர்ட்ஸ் என்று ஒரு கால் மணி நேரம் உயிர வாங்கிடுவான். கொஞ்ச நாள்ல அவனுக்கு போர் அடிச்சு போச்சு. இதுக்கு நடுவுல புரியுதோ இல்லையோ நான் பாட்டுக்கு சத்தம் போட்டு தப்பு தப்பா படிச்சுட்டு பொயிட்டே இருப்பேன். நடுவுல சிலது மட்டும் புரியும். அப்பொ ஒரு நாள் அப்பாவ இம்பெரெஸ் பண்ணனும்னு தோணி போச்சு. நம்மளோட அங்கில அறிவ எப்படியாவது அப்பாகிட்ட காமிச்சு நல்ல பேர் எடுதிடணும்னு ஒரு துடிப்போட இருந்தேன்.


அந்த நாளும் வந்தது. அன்னிக்கு செய்திதாள்ல ' Boat capsized thirty feared dead " ன்னு
ஹெட்லைன்ஸ். பூரா செண்டென்ஸ் புரிந்துவிட்டது. capsize புதிய வார்த்தை. டிக்ஷனரி பாத்தாச்சு. அண்ணன் கிட்டயும் கேட்டாச்சு. அப்பாவ அசத்த நான் ரெடி. அப்பாவும் வந்தாங்க. அப்பா துணியெல்லாம் மாத்தி ஈசி சேர்ல சாஞ்சாங்க. நான் அப்போதான் ஏதோ செய்திதாள புரட்டர மாதிரி பாவனை பண்ணிகிட்டு வந்துகிட்டே,..." அப்பா இன்னிக்கு ஹெட்லைன்ஸ் என்ன தெரியுமான்னு கேட்டேன்? அப்பாவும் சும்மா என்ன குஷி படுத்த, " என்ன நியூஸ் நீயே சொல்லேன்' அப்படீன்னாங்க. "Boat capsized thirty feared dead" அப்படீன்னு சத்தாமா படிச்சு காட்டினேன். அப்பாக்கு ஒரு நிமிஷம் ஆச்சர்யம். capsize ன்னா என்ன அர்த்தம்னு கேட்டாங்க. உடனே சடார்ன்னு "overturn"ன்னு சொன்னேன். அப்பாக்கு சந்தோஷம் தாங்கல. அத பாத்த எனக்கு தலயும் புரியல காலும் புரியல.....மெதுவா அப்பாகிட்ட போயி உக்காந்து ஒரு கூக்ளி போட்டேன் பாருங்க இப்பகூட மேல் லோகத்துல இருக்கர எங்க அப்பா விழுந்து விழுந்து சிரிப்பாங்க. அது என்னன்னா "thirty feared dead"ங்கரத அப்படியே literal அ டிரான்ஸ்லேட் பண்ணி " பாவம் இல்லப்பா அந்த முப்பது பேரும் பயத்துலயே செத்து போயி இருக்காங்க" அப்படீன்னு கேட்டேன் பாருங்க!!!!!!! கேக்கணுமா வீட்ல சிரிப்ப....இப்பகூட காதுல ஒலிக்குது.


இப்ப இத நினைச்சு பாக்கும்போது நம்ம அமிதாப் எதோ ஒரு படத்துல சொல்லுவாரே "English is a funny language" ன்னு அதுதான் நியாபகம் வருது.

Friday, February 23, 2007

Pretend Play

சின்ன வயசுல பொதுவா பெண் குழந்தைங்க ரொம்ப விளயாடரது இந்த Pretend Play தான். அதாவது ஒரு பத்து வயசுகுள்ள அம்மா அப்பா விளையாட்டும் டீச்சர் விளயாட்டும் விளயாடாத பெண் குழந்தைங்க கொஞ்சம் அதிசயம்தான். நான் கொஞ்சம் sporty type. ஆனாலும் இந்த விளையாட்டு ரசிச்சு விளயாடி இருக்கேன்.

இதுல என்ன விசேஷம்னா, நானும் என் இரண்டு தோழிங்களும் எப்போதுமே விளையாட்டிலும் தொழிங்களாதான் இருப்போம். ஆனா மூன்று மாதிரி வாழ்க்கை முறை விளையாட்டு விளையாடுவோம். மூன்று தொழிங்க கிராமத்துல இருக்கர மாதிரி, டவுன்ல இருக்கர மாதிரி அப்புரம் நகரத்துல இருக்கர மாதிரி. அதுனால அதுக்கு தகுந்த மாதிரி எங்களோட பேர், சாப்பாடு போட்டுக்கர துணி ஏன் பேச்சு மொழி எல்லாம் மாறிடும். இந்த விளையாட்டை மணி கணக்குல சுற்று சூழ்னிலை மறந்து விளயாடி இருக்கேன். இதுல வேடிக்கை என்னன்னா,
யாரு என்ன பேரு வச்சுக்கரது அப்படின்னு யோசிச்சே பாதி நேரம் போயிடும். கிராம விளையாட்டுனா எப்பொதுமே என் பேரு வள்ளி!! டவுன்னா காயத்ரி, சிட்டின்னா பாபி இல்லாட்டி பிங்கி!!! ஏன் இந்த மாறி பேரு வச்சுக்கணும்ன்னு யோசிச்சேன்னு சுத்தமா புரியல. பேரு வச்சப்புரம்.....எங்க இருக்கர மாறி விளையாட்டுன்னு ஒரு பெரிய discussion நடக்கும். ஒரு வழியா எல்லாம் முடிவு பண்ணின பிறகு ட்ரெஸ் பண்ண ஆரம்பிப்போம் அது போகும் ஒரு அரை மணி நேரம். அக்காவோட தாவணி, அம்மாவோட குங்கும பொட்டு(அப்பல்லாம் அஷான்னு ஒண்ணு கிடைக்கும் அத முதல்ல னெத்தில வச்சுட்டு அப்பரம் அதுக்கு மேல குங்குமம் வைப்பாங்க அம்மா, குங்குமம் கலையாம இருக்கரதுக்கு!!) so அந்த ஆஷாதான் எங்களோட rouge or blush. அப்பல்லாம் eyeliner வந்திருந்த புதுசு காஸ்மெட்டிக்ஸ்ல்லாம் உபயோகபடித்தினா தப்புன்னு நினைக்கர சூழ்நிலை. அதனால eyetex அ ஒரு விளக்குமாத்து குச்சியால இமைக்குமேல ஒருத்தர்க்கு ஒருத்தர் போட்டுப்போம்.கண்ண தொரந்தோம்னா மேல ஒட்டிக்கும் அதனால சின்ன குழந்தைங்களுக்கு திருஷ்டி பொட்டு வச்சுட்டு பவ்டர் வைப்போமெ அதுமாத்ரிபவுடர ஒத்துவோம். கண்ணு இமையெல்லாம் வெள்ளயா இருக்கரத பாத்து எங்களுக்கே சிரிப்பு தாங்காது.இப்படி எங்கள ஒரு மாதிரியா தயார் பண்ணிகிட்டு விளையாட்டை ஆரம்பிப்போம். அடுத்து dialogues யார் என்ன பேசரதுன்னு. முதல்லயே ஒருத்ருக்கு ஒருத்தர் சொல்லிடுவோம். " நான் இப்படி கேப்பேன் நீ இப்படி சொல்லணும்னு"!! இதுலயும் main characters and supporting characters லாம் உண்டு அனா ரொம்ப subtle அ இருக்கும்,யாரும் மனசு நோகாதபடி. வள்ளியா இருக்கரப்போ பெரிய பொட்டு, சைட் கொண்டை கஞ்சி, கூழு பழையது சாப்பிடுவோம். குடத்தை எடுத்துகிட்டு
போய் தண்ணி கொண்டு வருவோம். காயத்ரியா இருக்கும் போது ஒத்தை பின்னல், சின்ன பொட்டு இட்லி, தோசை, சாதம் சாப்பிடுவோம். காலெஜுக்கு போவோம். பிங்கி அல்லது பாபியா இருக்கும் போது bread ம் soup ம் சாப்பிடுவோம்,நோ பொட்டு, ஆஷா வச்சு lipstick போடுக்குவோம் தியேட்டருக்கு போய் சினிமா பாப்போம்.
இப்ப இத நினைச்சு பாக்கரபோது N.S.k "ஓட விஞ்ஞானத்த வளக்க பொரேண்டி" பாட்டு நியாபகம் வருது. I had so much fun playing those pretend games in which i could lose myself completely. இதுல உளவியல் ரீதியா ஏதாவது இருக்கா தெரியல தெரிஞ்சவங்க சொல்லுங்க.

Saturday, February 17, 2007

சாகரன் - கல்யாண்- அஞ்சலி

இவரபத்தி ஒண்ணுமே தெரியாமதான் இருந்தேன். பல பதிவர் அவர பத்தி எழுதினத படிக்க அடாடா ஒரு நல்ல மனிதரோட அறிமுகம் கிடைக்காம போயிடுச்சேன்னு ரொம்ப வருத்தமா இருந்தது. இந்த மாறி இவரோட நண்பர்கள், குடும்பத்தினர் மட்டும் இல்லாம என்ன மாறி பல பேர அவரோட அகால மரணம் ரொம்பவே பாதிச்சிடுச்சு. அவரோட ஆன்மா ஷாந்தி அடையட்டும்.

மனசு ரொம்ப வேதனையா இருக்கும்போது Beatles "let it be" பாட்ட கேப்பேன். இந்த பாட்ட, அவர இழந்து தவிக்கர நண்பர்கள், குடும்பத்தினர்க்கு சமர்பிக்கரேன்.

Let it be (lyrics)
The Beatles (Lennon/McCartney)
When I find myself in times of trouble
Mother Mary comes to me
Speaking words of wisdom, let it be.
And in my hour of darkness
She is standing right in front of me
Speaking words of wisdom, let it be.
Let it be, let it be.
Whisper words of wisdom, let it be.
And when the broken hearted people
Living in the world agree,
There will be an answer, let it be.
For though they may be parted there is
Still a chance that they will see
There will be an answer, let it be.
Let it be, let it be. Yeah
There will be an answer, let it be.
And when the night is cloudy,
There is still a light that shines on me,
Shine on until tomorrow, let it be.
I wake up to the sound of music
Mother Mary comes to me
Speaking words of wisdom, let it be.
Let it be, let it be.
There will be an answer, let it be.
Let it be, let it be,
Whisper words of wisdom, let it be

Thursday, February 15, 2007

அறிமுகம்- தொடர்ச்சி, மட்றும் நன்றி

அமெரிக்கா வந்து கொஞ்ஜம் பிரம்மிப்புலேந்து மீண்டு பின்னர் ட்ரைவிங் லைஸென்ஸ் வாங்கி குழ்ந்தைகளை பள்ளில சேர்த்தபின்னர் கையில் மிச்சம் இருந்தது நேரம். நேரம்னா கொஞச நஞ்சம் இல்ல. ரொம்பவே. அப்போ கணிணிய செய்திகள் படிக்க , e-mail அனுப்ப மட்றும் chat செய்ய மட்டுமே உபயோகம் பண்ணிட்றுந்தேன். நடுவுல எப்படியோ தடுக்கி விழுந்து blogs பக்கம் வந்து சேந்தேன். முதல்ல ஆங்கில blogs மட்டுமே படிச்சிட்ருந்த நான் எப்படி தமிழழுக்கு வந்தேன்னு நியாபகம் இல்ல. ஆனா என்ன முழுமையா ஆக்ரமிச்சுது இந்த blog world. முதல்ல நிறுத்தினது மங்கையர் மலர் subscription!!

ஆரம்பத்துல நான் ரொம்ப ஆர்வமா படிக்க ஆரம்பிச்ச தமிழ் blog அல்வா சிட்டி விஜையோடது . நல்ல ஜனரஞ்ஜகமான எழுத்து அவரோடது. அவரோட blog அ விடாம படிச்சிருவேன்(அவர் இப்போ எழுதறது இல்லையா??), சிவா(இளையராஜாவோட பரம் ரசிகர், போட்டில்லாம் வச்சு கலக்குவார்!! இப்பொ கிட்டார் கத்துக்க போயிட்டார்!!), முத்துக்கு முத்து, கோ கணேஷ், உஷா இவங்க blogs கெல்லாம் நான் ரெகுலர் விசிட்ட்ர்.(நான் படிச்சவங்க பாதி பேர காணலை!! உஷா temperory break.) இவங்கள எல்லாம் படிச்சுட்டு தயங்கி தயங்கி முதல்ல ஆங்கிலத்திலும்,thanglishlayum...அப்புரம் தட்டு தடுமாறி தமிழ்லயும் பின்னூட்டம் போட ஆரம்பிச்சேன்.One fine day சும்மா ஏதாவது எழுதிவைப்போம்னு ஒரு ஆங்கில intro எழுதிவச்சேன்.ஆச்சர்யம் என்னடான்னா நம்ப தேன் சிரில்லும் surveys புகழ் சர்வேசனும் வந்து ஏன் நிருத்திட்டீங்க எழுதுங்க ஊக்கம் அளிக்கரோம்ன்னு பின்னூட்டிடு போயிட்டாங்க. சரி இத விட நல்ல சகுனம் கிடைக்காதுன்னு நினைச்சு நம்ப புராணத்த ஆரம்பிசிடலாம்னு முடிவு பண்ணி ரெண்டு நாளா டைப் அடிச்சிட்டு இருக்கேன்!!(no kidding!! Bengay in priority mail please).

இப்போ தமிழ்மணத்துல ஒரளவு எல்லா பதிவுமே மேஞ்சிருவேன்(skim read).அட்டகாசமான எழுத்துக்கள் !! அறிவான எழுத்துக்கள் !! creativity at its best with its unavoidable hiccups இங்க பாக்கமுடியுது. so என்னோட எழுத்துக்கள் இங்க ஒரு எலிமெந்டரி மாணவியோட எழுத்து மாதிரிதான் இருக்கும். But still i want to give it a try!!(நன்றி சர்வேசன், சிரில்!)

Tuesday, February 13, 2007

அறிமுகம்

ஆங்கில அறிமுகம் எழுதியாச்சு சின்னதா தமிழிலும் எழுதிடலாம்னு ஆரம்பிசிட்டேன். பெரிசா சொல்லிக்கர மாறி ஒண்ணும் இல்ல. பொறந்து வளந்ததெல்லாம் தமிழ்நாடுதான். அப்பா ரயில்வேச்ல வேல.நிரைய வேலை மாத்தம் வரும். அத்னால நிரைய ஊர், நிரைய அனுபவம், பல பள்ளிகூடம்,நண்பர்கள் கூட்டம். காலெஜ் நாட்கள் திருச்சில. எல்லார் மாரியும் எனக்கும் ரொம்ப இனிமையான நாட்கள் அவை. அப்பரம் கல்யாணம். மறுபடியும் இட மாட்றம்.வாசுதேவநல்லூர், மதுரை,அஹமதாபாத்,பெங்களூர் இப்ப இருப்பது அமெரிக்காவில். அப்படியே சம்சார சாகரத்தில் மூழ்கி இருக்கேன். மூச்சுவிட்டு கொள்வதற்க்கு அப்ப அப்ப மேல வந்து தமிழ்ம்ணம் படிச்சிருவேன். மத்தபடி ரொம்ப varied interests உள்ள ஆள் நான்.