இன்றைக்குக்கு ஓப்ரா வின்ப்ரியின் (Oprah Winfrey) சிறப்பு விருந்தினராக வந்திருந்தவர் இந்த ராஜ்பிப்லா (Princely State)என்கிற ராஜ்யத்தின் அரசகுமாரன். பெயர் மன்வேந்த்ர சிங். இவர் அப்பாதான் இப்பொது இருக்கும் அரசர் ரகுபீர் சிங். ரகுபீர் சிங்கிற்க்கு பிறகு ரரஜய்த்தை (!!)ஆளவேண்டியது இந்த மன்வேந்த்ர சிங். ஆனால் மன்வேந்த்ர சிங்கை அவர் அம்மா நிராகரித்து விட்டார், அப்பாவும் ஒத்துகொள்ளவில்லை..... இதனால் வருத்தம் அடைந்த மன்வேந்தர் தன் ராஜ்யத்தை துறந்துவிட்டார். அதற்கான காரணம் இந்த மன்வேந்தர் சிங் தான் ஒரு ஓரின சேர்க்கையாளர் என்பதை தெரிவித்ததனால்.
இவரை பற்றியும் இவர் ராஜய்த்தை பற்றிய விவரங்கள் கீழே
http://www.uq.net.au/~zzhsoszy/ips/r/rajpipla.html
http://en.wikipedia.org/wiki/Rajpipla
ஓப்ராவின் கேள்விகளுக்கு தெளிவான ஆங்கிலத்தில் அழகாக பதில் சொன்னார். தான் எப்படி குழம்பி தவித்ததையும்......சரியான வழிகாட்டுதல் இல்லாமல் எப்படி திருமணம் செய்துகொண்ட தவறையும் கூறினார். இவரது திருமணம் ஒரு வருடத்தில் விவாகரத்தில் முடிந்திருக்கிறது.
மன்வேந்தர் சிங் பேட்டியில் கூறும் பொழுது ராஜய்த்தை விட்டுகொடுத்ததினால் தனக்கு ஒரு ப்ரச்சனயும் இல்லை என்றும் தன்னுடைய sexual preference பற்றி கூறியதால் ஒரு பெரிய மன பாரம் குறைந்தது என்று சொன்னார். ஓரினசேர்ககயாளருக்கான சேவையில் தான் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்படுவதாகவும் அவருடைய மக்கள் அவரை எப்போதும் போல் மிகுந்த மரியாதையுடன் நடத்துவதாக சொன்னார்.
எனக்கு என்ன புரியவில்லை என்றால் ஓபெரா ஓரின சேர்க்கை என்பது இன்னும் ஒத்துகொள்ள படாத தண்டிக்கபட கூடிய ஒரு விஷயமாகவே இந்தியாவில் இருப்பதாக கூறியபோது மன்வேந்தர்......"Homosexuality is not punishable in India but the act of homosexuality is" என்று கூறினார்....... என்ன அர்த்தம்?
மத்தபடி ராஜகுமாரன் மாதிரியே எதற்காக உடட உடுத்தி வந்திருந்தார் என்று தெரியவில்லை.....:):)(தலையில் டர்பன், நெற்றியில் பொட்டு!) பேட்டி, ஐஸ்வர்யா ராயொடு இருந்த'தை விட நன்றாகவே இருந்தது.....
Wednesday, October 24, 2007
Saturday, October 13, 2007
ஒரு மனித வாழ்க்கையில் எத்தனை கட்டங்கள் !)
நேற்று செய்திதாளில் வந்திருந்த ஒரு கட்டுரை ரொம்ப interesting. என்னனா ஒரு மனித வாழ்கைய சாதரணமா எப்படி பிரிக்கிரோம்?? குழந்தை பருவம் (childhood), பதின்ம வயது(teenage), இளமை (வாலிபம்?)பருவம்(Adult) அப்பரம் முதுமை (Old age.) அப்படித்தானே இல்லையா? ஆனா இப்பொ புதுசா ஒரு கட்டம் அதாவது phase கண்டுபிடிசிருக்காங்களாம். அந்த புது கட்டத்துக்கு பேரு ஆடிசி (Odyssey). இந்த ஆடிசி வயது பதின்ம வயது முடிந்ததும் வருவது. அதாவது சுமார் 20 வயதிலிருந்து ஆரம்பம். 20 somethings........!!!
இந்த வயது குழந்தைகள் உள்ள பெற்றோருக்கு இது ஒரு பெரிய தலைவலியா இருக்காம். ஏன்னா பசங்க குறிகோள் இல்லாம, எதிலும் ஒரு தீவிர ஈடுபாடு இல்லாம சுத்தராங்களாம். இந்த நிலமை ஒரு 5 வருஷமா இருந்த பரவாயில்லா ஆனா அதுமாட்டுக்கு 5 லேந்து இப்பொ 7 வருஷமா ஆயிடுச்சாம்.ஆசிரியர் சொல்ரார்
இந்த வயது குழந்தைகள் உள்ள பெற்றோருக்கு இது ஒரு பெரிய தலைவலியா இருக்காம். ஏன்னா பசங்க குறிகோள் இல்லாம, எதிலும் ஒரு தீவிர ஈடுபாடு இல்லாம சுத்தராங்களாம். இந்த நிலமை ஒரு 5 வருஷமா இருந்த பரவாயில்லா ஆனா அதுமாட்டுக்கு 5 லேந்து இப்பொ 7 வருஷமா ஆயிடுச்சாம்.ஆசிரியர் சொல்ரார்
" During this decade,20 somethings go to school and take breaks from school. They live with friends and they live at home. They fall in and out of love. They try one career and they try another"
இந்த குறிப்பிட்ட வயது மக்கள் கல்யாணம் மற்றும் குழந்தை பெற்றுகொள்வதை தள்ளி போடுவதிலிருந்து ஆரம்பிச்சு ஒரு நிலையான வேலைய தேடிக்கரதும் இல்ல.
1960 களில் பிறந்தவர்கள் பல பேரு இந்த வயதில் இதையிதை செய்து முடிக்க வேண்டும் என்ற மனதோடு தெளிவாக செயல் பட்டாங்களாம்.அதாவது, 20 வயதிலிருந்து 35 வயதிலிருக்கும் ஒருவருக்கு சில பொறுப்புகள் இருந்ததாகவும் அதை கடைபிடித்தாகவும் சொல்கிரார் ஆசிரியர்.
"People tend to define adulthood by certain accomplishments- becoming financially independent, getting married and starting a family"
இது போக போக இன்னும் கவலைகிடமான ஒரு கட்டமாக போக நிறைய வாய்ப்பிருக்குன்னு எழுதியிருக்கார். இந்த கட்டத்தைதான் ,"Friends" ரொம்ப நல்லா படம் பிடித்து காட்டியதாகவும் எழுதியிருக்கார்.
P.S இப்பொ adulthoodக்கும் old ageக்கும் நடுவுல இன்னொரு கட்டம் இருக்கு அதுதான் active retirement!!!
Subscribe to:
Posts (Atom)